இடுகைகள்

திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் ஆயத்தப் பணிகள் : எங்கே செல்கிறது தமிழகம்? பரபரப்புத் தகவல்கள்

படம்
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு காரணமாக பல விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் நாம் அந்த காரணங்களை பிறகு அலசலாம். தற்போது முகநூலில் குறிப்பாக சீமானுடைய நாம் தமிழர் கட்சி தம்பிகள் "திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். இனியாவது விழிக்கத் துவங்குமா?" என தொடர்ந்து நேற்று முதல் பல்வேறு விதமாக இரண்டு புகைப்படங்களை காட்டி பகிர்ந்து வருகின்றனர். படம் 1 : படம் 2 : மேலே காட்டப்பட்டுள்ள இந்த இரு புகைப்படங்கள் தான் அனைத்து பதிவுகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு ஆயத்தப் பணிகள் இனிதே தொடங்கியது என பல்வேறு நபர்களால் பதியப்பட்டுள்ளது. நீங்களும் முகநூலில் சென்று, "திருவாரூர் புலிவலம்" என தேடுபொறியில் தேடிப் பாருங்கள். பல்வேறு பதிவுகள் நேற்று முதல் பதிவிடப்பட்டிருப்பதும் அதில் பெரும்பாலானவை நாம் தமிழர் தம்பிகளாலேயே பதிவிடப்பட்டிருப்பதும்  தெரியவரும். உதாரணத்திற்கு சில இங்கே. குறிப்பு : இதைப் பகிர்ந்த தனிப்ப...

ICF Act Apprentice பணிகள் இனி தமிழருக்கே : தமிழக வேலை தமிழருக்கே கோஷத்திற்கு கிடைத்த வெற்றி?

படம்
கடந்த சில தினங்களாக வெளிவந்த தினசரிகளில் சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் "பழகுனர்" பயிற்சிக்கு ஆட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அதில் இந்த முறை தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் தமிழ்நாட்டில் "தமிழக வேலை தமிழருக்கே" என முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களினால் தான் இது சாத்தியமானது என்றும் உரிமையைக் கேட்டால் தான் கிடைக்கும் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையா? போராட்டத்திற்கு கிடைத்த பலனா? என்பதை ஆராயவே இந்த பதிவு. மே 20ம் தேதி அன்று சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் "தொழில் பழகுனர்" திட்டத்தின் கீழ் 992 நபர்களை ஓராண்டு/ஈராண்டு காலத்திற்கு மாத உதவித் தொகையுடன் பயிற்சி வழங்குவதற்காக அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. இதில் ITI முடித்தவர்களுக்கு 512 பணியிடங்களும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 480 பணி...

சீமான் பேச்சு - அரசியல் அபிலாஷைக்கா? இனத்தின் எழுச்சிக்கா?

தான் பீலா விடுகிறேன் என்பதை வெளிப்படையாகவே சீமான் ஒப்புக் கொண்டாலும், அண்ணனின் விழுதுகள் என்று சிலர் அண்ணன் பேசுவதை உண்மையென்று நம்பி உணர்ச்சிப் பிழம்பாக திரிகின்றனர். அப்படிப்பட்ட தம்பிகள் சிலர் பகிர்ந்த காணொளி தான். இதில் அண்ணன் என்ன சொல்கிறார் என்றால் தேர்தலுக்காகத்தான் CRPF படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்கிறார். அதாவது தேர்தலுக்காக நடத்தப்பட்டது என்றால் அதை மோடி தான் நடத்தியுள்ளார் என்று கூட நிறைய தம்பிகள் உளறிக் கொண்டுள்ளார்கள். சரி அந்த தம்பிகள் அப்படித்தான். அவர்கள் அண்ணன் "இந்தியா என்பதே கற்பனை, தமிழ் தேசியமே நமக்கானது , இனத்தின் விடுதலை" என்று பேசினாலும் "ஜே!" சொல்வார்கள். இவர்கள் எதிர்க்கும் "இந்திய தேசியம் தேர்தல் நடத்தினால் அதில் பங்கெடுத்து ஆட்சியைப் பிடிப்போம்" என்றாலும் முன்பு இந்திய தேசியத்தை எதிர்த்து விட்டு பிறகு அதே தேசியம் நடத்தும் தேர்தலில் பங்கேற்பது அறிவிலித்தனமாக இல்லையா? என்று சிந்திக்காமல் "ஜே" சொல்லும் கூட்டம். சரி விசயத்திற்கு வருவோம். தேர்தலுக்காகத் தான் தாக்குதலை பாகிஸ்தானிலிருந்து வந்து திட்...

தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறதா கூகுள் நிறுவனம்? - அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்

படம்
உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் 2016ல் வெளியிட்ட ஆண்ட்ராய்டு செயலியான கூகுள் டுயோ மூலம் தனது தமிழின விரோதப் போக்கை வெளிப்படுத்தியிள்ளதா? அப்படி என்ன செய்தது....... சரி விசயத்துக்கு வருவோம்! கூகுள் டுயோ என்பது HD Video Calls'களை மேற்கொள்ள உதவும் ஒரு செயலி. இது Android மற்றும் iOS'களில் கிடைக்கிறது. இது கடந்த 2016 மே 18ம் தேதி கூகுள் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டு 16, 2016'ல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கூகுள் டுயோ தனது பிலிப்பைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு Data Rewards சலுகையை அறிவித்தது. இதற்கடுத்ததாக நவம்பரில் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக Cash Rewards சலுகையை வழங்க ஆரம்பித்துள்ளது. Cash Rewards Program'ல் இணைய இங்கே சொடுக்கவும் இந்த Cash Rewards எப்படி செயல்படுகிறது? கூகுள் டுயோ செயலியில் தனது முதல் Video Call'ஐ மேற்கொள்ளும் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த Cash Rewards கிடைக்கும். இந்த Cash Rewards எப்படி கிடைக்கும்? இந்த Cash Rewards'ஐ பெற நீங்கள் Google Pay(Formerly Tez)'யில் கணக்கு...

பிரிட்டன் எம்.பி'யே இந்திய பிரதமரை அசிங்கப்படுத்திவிட்டார் - மோடிக்கு இப்பவாவது உரைக்குமா?

படம்
சமீபத்தில் ஒரு மீம் வைரலாகி வருகிறது. அதில் பிரிட்டன் எம்.பி பீட்டர் போன்,  இந்திய மோடி அரசு 3000 கோடியில் பட்டேல் சிலையை கட்டியதை முட்டாள் தனமான செயல் என்று விமர்சித்துள்ளதாக அந்த மீம் கூறுகிறது. இது தான் அந்த மீம்.... இப்படிப்பட்ட மீம்களையெல்லாம் பார்த்து உடனே உணர்ச்சிவசப்பட்டு அடடே, அருமை என்று பகிரக் கூடாது. மாறாக இது உண்மையா என்று ஆராய வேண்டும். ஆனா ஊனா இது பெரியார் மண்ணு டோய் என்று வாய் கிழிய கூவுகிறீர்களே, அந்த பெரியார் "நானே சொன்னாலும் நம்பக் கூடாது, உண்மையை ஆராய்ந்து பிறகு நம்புங்கள்' அப்படினு தான் சொல்லியிருக்கார்'ல. அத கொஞ்சம் மண்டையில ஏத்துங்க மக்களே.... சரி, நாம விசயத்துக்கு வருவோம். உண்மையிலேயே இந்த பீட்டர் போன் என்ற பிரிட்டன் எம்.பி இந்திய பிரதமர் மோடி பட்டேல் சிலை அமைத்ததை முட்டாள் தனமான செயல் என்றாரா? இல்லவே இல்லை. அவர் சொன்னதன் சாராம்சம் வேறு. நம்மாளுங்க சினிமா மாயையில் இருப்பதால் கொஞ்சம் மசாலா தடவி, இது தான் உண்மை என்பதைப் போல் மீம் பரப்பி வருகிறார்கள். ஏன் அதன் சாராம்சம் வேறு என்பதற்குள் போகும் முன் பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட வெ...

நரேந்திர மோடியால் இந்தியப் பொருளாதாரம் 1970களுக்கு பின்னோக்கி சென்று விட்டதா?

படம்
ஜானி ஜானி எஸ் பாப்பா முகநூலில் வருவதை அப்படியே நம்பக் கூடாது பாப்பா.... விசயம் என்னன்னா நம்ம அமெரிக்க வாஷிங்டன் போஸ்ட் ஒரு போஸ்ட் போட்டிருக்கு - அதில் இந்திய பிரதமரின் நடவடிக்கைகளால் பொருளாதார ரீதியாக இந்தியா பின்னோக்கி 1970'களுக்கு சென்று விட்டதாக எழுதியிருக்காம். இத வச்சு நம்மாளுங்க நம்ம இந்திய பிரதமர விமர்சிக்கிறார்களாம்.... விமர்சனம் பண்ணுங்க தப்பில்ல, ஆனால் பாதிய மென்னு முழுங்கி சொல்லாதீங்க.... முழுசா சொல்லுங்க.... இந்த கட்டுரை தற்போது வந்தத போல வெளியிட்டுருக்காங்க நம்ம ஆளுங்க... ஆனா உண்மை என்னன்னா இந்த கட்டுரை ஜனவரி 23, 2017ல் வெளிவந்திருக்கு, கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகப் போகிறது. இப்ப பரப்புவதன் நோக்கம் என்னனு பதிவ போட்டவருக்கே வெளிச்சம். அடுத்து இந்த கட்டுரை வந்திருப்பது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் குளோபல் ஒப்பீனியன் பகுதியில் வெளிவந்துள்ளது. குளோபல் ஒப்பீனியன் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பரிச்சயமான பத்திரிகையாளர்கள் தங்களது கட்டுரையை வெளியிடுவார்கள். முன்பொருமுறை நமது இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து போனபோது அங்குள்ள பத்திரிகையில் இந்திய-இங்கிலாந...

பசும்பொன் தேவர் அய்யாவைக் கொலை செய்ய முயர்ச்சித்தார்களா?

படம்
பசும்பொன் தேவரை கொலை செய்ய முயற்சித்த இஸ்லாமியர்கள்... பசும்பொன் கிராமத்துக்கு அருகே இருக்கும் ஊர் அபிராமம். அங்கே இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்குப் போய் தொழிலோ, வியாபாரமோ செய்து திரும்பி வந்தவர்கள் பெரும் பணக்காரர்களாக வாழ்பவர்கள். அந்த கிராமத்தில் ஒரு சந்தை இருந்தது. வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடும். அது முஸ்லீம்கள் அதிகம் வசிக்கிற பகுதி. சந்தைக்கு வியாபாரம் செய்ய வருகிற இளம் பெண்களை சில முஸ்லீம் இளைஞர்கள் கேலி செய்து வம்புக்கிழுப்பது நடந்து வந்தது. ஒரு நாள் மோர் விற்ற ஒரு பெண்ணிடமும், காய்கறி விற்கப் போன பெண்ணிடமும் அவர்கள் மோசமாக நடந்து கொண்டார்கள். அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு அங்கே யாருக்கும் தைரியமும் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் பசும்பொன்னுக்கு வந்தார்கள். தேவரிடம் முறையிட்டார்கள். "நான் பார்த்துக்கொகிறேன். போய் வாருங்கள்" என்று அந்தப் பெண்களை அனுப்பி வைத்தார் தேவர். எம்மதத்தினராயினும் சரி தாய்க்குலமாகிய பெண் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதியைத் தாங்கமுடியாத உள்ளம் கொண்ட தே...