இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பயிற்று மொழியாக தாய்மொழியைத் திணிக்கும் மத்திய அரசு? : புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன

படம்
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து மாநிலங்களிலும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட நபர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தயாரிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையானது கடந்த மே 31'ம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவே இந்த புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் வேலையில் ஈடுபட்டது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மக்களின் கருத்தறிய வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில்  இதை இந்தித் திணிப்பு என்று சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தனர். திராவிட அரசியல்வாதிகள் இதைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் மக்களிடையே இந்தித் திணிப்பு என திரும்பத் திரும்ப பேசி உணர்ச்சியை தூண்டிக் கொண்டே இருந்ததால், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "மத்திய அரசிற்கு எந்த ஒரு மொழியையும் திணிக்கும் எண்ணம் இல்லை. அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அரசு செயல்படுகிறது" என அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து மும்மொழிக் கொள்கையை இந்தித் திணிப்பு என தவற...

63 வயதில் பதவி விலகிய காமராசர் எங்கே? 69 வயசுல கட்சி ஆரம்பிக்கப் போறேனு சொல்ற ரஜினி எங்கே? : நாம் தமிழர் கலகலப்பு

படம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை என்றுமே கடுமையாக எதிர்ப்பவர் தான் நம்ம சிவகங்கை அண்ணாச்சியும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்கள். நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் பல வருடங்களாக அரசியலுக்கு இதோ வருவார், அதோ வருவார் என எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு வழியாக, "கிளம்பிட்டேன், இதோ வந்துக்கிட்டே இருக்கேன். அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் வந்து விடுவேன்" எனக் கூறி இருக்கிறார். ஆக அவர் அரசியலுக்கு வருவது உறுதியாயிற்று. இதையடுத்து அவரை வந்தேறி என்றும் பாஜக சதியென்றும் முகநூலில் கலகலப்பூட்டிக் கொண்டிருந்த நம் தம்பிமார்கள் தற்போது புதியதாக ரஜினியைப் பற்றிய மீம் ஒன்றினை வைரலாக்கி வருகின்றனர். அந்த மீம் இது தான். இந்த மீம்'ல் "63 வயதில் பதவி விலகிய காமராசர் எங்கே? 69 வயதில் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்ற ரஜினி எங்கே?" எனக் கேட்டு கலாய்த்துள்ளனர். கட்சி ஆரம்பிக்க வயசு முக்கியமா? அவர் கட்சி ஆரம்பித்து அவருடைய கொள்கைகளை பேசுவார். மக்கள் அவருக்கு ஆதரவளித்தால் அவர் ஆட்சியில் க...

நாங்களாத் தொட மாட்டோம், ஆனா அவுங்களே கலைச்சிடுவாங்க : கர்நாடக அரசைப் பற்றி எடியூரப்பா அதிரடிப் பேச்சு

படம்
கடந்த 2018'ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சித்தராமையா தலைமையிலான அன்றைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து பி.எஸ்.எடியரப்பா தலைமையில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் மொத்தம் 224 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் 104 இடங்கள் மட்டுமே பெற்றதாலும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைப் பெற முடியாமல் போனதாலும் ஆட்சியமைக்க இயலவில்லை. இந்நிலையில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி பாஜக ஆட்சியமைப்பதை எப்படியேனும் தடுத்தாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வெறும் 37 தொகுதிகளில் வென்றிருந்த மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜக'வின் எடியரப்பா குதிரை பேரங்களில் ஈடுபட்டு ஆட்சியைக் கலைக்க முயல்வாத பலமுறை ஆளும் கூட்டணி தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் பதவியேற்கும் நிகழ்விற்காக டெல்லி சென்ற எடியரப்பா கர்நாடகா திரும்பிய போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "டெல்லியில் நான். கட்சியின் மத்திய...