இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் ஆயத்தப் பணிகள் : எங்கே செல்கிறது தமிழகம்? பரபரப்புத் தகவல்கள்

படம்
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு காரணமாக பல விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் நாம் அந்த காரணங்களை பிறகு அலசலாம். தற்போது முகநூலில் குறிப்பாக சீமானுடைய நாம் தமிழர் கட்சி தம்பிகள் "திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். இனியாவது விழிக்கத் துவங்குமா?" என தொடர்ந்து நேற்று முதல் பல்வேறு விதமாக இரண்டு புகைப்படங்களை காட்டி பகிர்ந்து வருகின்றனர். படம் 1 : படம் 2 : மேலே காட்டப்பட்டுள்ள இந்த இரு புகைப்படங்கள் தான் அனைத்து பதிவுகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு ஆயத்தப் பணிகள் இனிதே தொடங்கியது என பல்வேறு நபர்களால் பதியப்பட்டுள்ளது. நீங்களும் முகநூலில் சென்று, "திருவாரூர் புலிவலம்" என தேடுபொறியில் தேடிப் பாருங்கள். பல்வேறு பதிவுகள் நேற்று முதல் பதிவிடப்பட்டிருப்பதும் அதில் பெரும்பாலானவை நாம் தமிழர் தம்பிகளாலேயே பதிவிடப்பட்டிருப்பதும்  தெரியவரும். உதாரணத்திற்கு சில இங்கே. குறிப்பு : இதைப் பகிர்ந்த தனிப்ப...

ICF Act Apprentice பணிகள் இனி தமிழருக்கே : தமிழக வேலை தமிழருக்கே கோஷத்திற்கு கிடைத்த வெற்றி?

படம்
கடந்த சில தினங்களாக வெளிவந்த தினசரிகளில் சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் "பழகுனர்" பயிற்சிக்கு ஆட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அதில் இந்த முறை தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் தமிழ்நாட்டில் "தமிழக வேலை தமிழருக்கே" என முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களினால் தான் இது சாத்தியமானது என்றும் உரிமையைக் கேட்டால் தான் கிடைக்கும் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையா? போராட்டத்திற்கு கிடைத்த பலனா? என்பதை ஆராயவே இந்த பதிவு. மே 20ம் தேதி அன்று சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் "தொழில் பழகுனர்" திட்டத்தின் கீழ் 992 நபர்களை ஓராண்டு/ஈராண்டு காலத்திற்கு மாத உதவித் தொகையுடன் பயிற்சி வழங்குவதற்காக அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. இதில் ITI முடித்தவர்களுக்கு 512 பணியிடங்களும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 480 பணி...