இடுகைகள்

சிபிஎஸ்இ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த ஐசிஎஸ்இ கல்வி வாரியம்..!

படம்
நாட்டின் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் எனும் ஐசிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது என்று வாரிய செயலாளர் ஜெர்ரி அராத்தூன் இன்று தெரிவித்தார். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இந்த முக்கியமான முடிவு வந்துள்ளது. "தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்று மதிப்பீட்டு அளவுகோல்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று அராத்தூன் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரதமர் இன்று ஒரு உயர்மட்டக் கூட்டத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோல்களின்படி சரியான நேரத்தில் தொகுக்க நடவடிக்கை எடுக்கும் என்று முடிவு செய்தது. மாணவர்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உள்ள கவலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 12 ஆம் வகுப்பு ...

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து..! மாணவர்களின் நலனே முக்கியம் எனக் கூறிய மோடி..!

படம்
பிரதமர் நரேந்திர மோடி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தார். சிபிஎஸ்இயின் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கிய பின்னர், இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற பரந்த மற்றும் விரிவான ஆலோசனைகள் மற்றும் மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பிலிருமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா தொடங்கியபோது, 2020 மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. பின்னர் கொரோனா குறைந்த பிறகு தாமதமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. எனினும் அப்போது 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் பிறகு கொரோனா பல மாநிலங்களிலும் குறைந்ததால், பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் பின்னர் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட்டன. எனினும் ஆன்லைன் வகுப்புகள் அனைவருக்கும் வாய்க்குமா என்பது கேள்விக்குறிதான். இதன...