நாங்களாத் தொட மாட்டோம், ஆனா அவுங்களே கலைச்சிடுவாங்க : கர்நாடக அரசைப் பற்றி எடியூரப்பா அதிரடிப் பேச்சு
கடந்த 2018'ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சித்தராமையா தலைமையிலான அன்றைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து பி.எஸ்.எடியரப்பா தலைமையில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் மொத்தம் 224 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் 104 இடங்கள் மட்டுமே பெற்றதாலும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைப் பெற முடியாமல் போனதாலும் ஆட்சியமைக்க இயலவில்லை. இந்நிலையில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி பாஜக ஆட்சியமைப்பதை எப்படியேனும் தடுத்தாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வெறும் 37 தொகுதிகளில் வென்றிருந்த மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜக'வின் எடியரப்பா குதிரை பேரங்களில் ஈடுபட்டு ஆட்சியைக் கலைக்க முயல்வாத பலமுறை ஆளும் கூட்டணி தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் பதவியேற்கும் நிகழ்விற்காக டெல்லி சென்ற எடியரப்பா கர்நாடகா திரும்பிய போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "டெல்லியில் நான். கட்சியின் மத்திய...