இடுகைகள்

சீமான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் ஆயத்தப் பணிகள் : எங்கே செல்கிறது தமிழகம்? பரபரப்புத் தகவல்கள்

படம்
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு காரணமாக பல விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் நாம் அந்த காரணங்களை பிறகு அலசலாம். தற்போது முகநூலில் குறிப்பாக சீமானுடைய நாம் தமிழர் கட்சி தம்பிகள் "திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். இனியாவது விழிக்கத் துவங்குமா?" என தொடர்ந்து நேற்று முதல் பல்வேறு விதமாக இரண்டு புகைப்படங்களை காட்டி பகிர்ந்து வருகின்றனர். படம் 1 : படம் 2 : மேலே காட்டப்பட்டுள்ள இந்த இரு புகைப்படங்கள் தான் அனைத்து பதிவுகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு ஆயத்தப் பணிகள் இனிதே தொடங்கியது என பல்வேறு நபர்களால் பதியப்பட்டுள்ளது. நீங்களும் முகநூலில் சென்று, "திருவாரூர் புலிவலம்" என தேடுபொறியில் தேடிப் பாருங்கள். பல்வேறு பதிவுகள் நேற்று முதல் பதிவிடப்பட்டிருப்பதும் அதில் பெரும்பாலானவை நாம் தமிழர் தம்பிகளாலேயே பதிவிடப்பட்டிருப்பதும்  தெரியவரும். உதாரணத்திற்கு சில இங்கே. குறிப்பு : இதைப் பகிர்ந்த தனிப்ப...

சீமான் அண்ணாச்சியும் நாயக்கர்களும் - அண்ணனுக்கு என்ன தான் ஆச்சு!

படம்
சிவகங்கையிலிருந்து சினிமா ஆசையின் காரணமாக சென்னை வந்த சீமான் தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப காலங்களில் தன்னை ஒரு பெரியாரியவாதியாக காட்டிக் கொண்டார். பின்னர் தமிழர் தேசியம் என்றார், வீரத் தமிழராக நாயக்கர்களைக் கை காட்டி நம்மை அவர்கள் அடிமைப் படுத்தி ஆண்டார்கள், அவர்கள் வந்தேரிகள் என்று நமது உணர்ச்சியை தூண்டினார். பிறகு சில காலம் கழித்து நாம் தமிழரான பிறகு நாயக்க வாரிசுகளை "என் அப்பத்தா, என் அப்பச்சி" என வீர வசனம் பேசி உணர்ச்சியை தூண்டுகிறார். உண்மையில் இவரின் கொள்கை தான் என்ன? யாருக்கு தெரியும், நேத்து நாயக்கர்களை திட்டி, இன்று ஆராதிப்பதைப் போல நாளைக்கு வந்தேரிகளையும் ஆராதிக்கலாம். ஒரு கட்சியென்றால் அதன் தலைமைக்கு ஒரு கொள்கை இருக்கும். அதன் வழி நடப்பவர்கள் அந்த கட்சியில் இணைந்து செயல்படுவர். கட்சியை தொடங்கியவருக்கே என்ன கொள்கை, கோட்பாடு என்பது தெரியாத போது இவரை நம்பி பின்செல்லுபவர்கள் "ஏன்னே இப்படி?" என்று கேட்கிறார்களா என்று பார்த்தால் அவர்கள் எளிய தமிழ்ப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்த மாதிரியான எளிய தமிழ்ப் பிள்ளைகளை பார்க்கும் போது, இங்கு இணை...