இடுகைகள்

Tamilnadu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேரள சட்டசபையில் ஓங்கி ஒலித்த தமிழ்... தேவிகுளம் தொகுதி எம்எல்ஏ ராஜா தமிழில் பதவியேற்பு!

படம்
கேரள தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வான ராஜா, கேரள சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாக தமிழில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது கேரளாவில் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி கேரள மாநிலத்தில் நடைபெற்றது. மே 2 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி 99 இடங்களை வென்றது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி மீதமுள்ள 41 இடங்களை வென்றது. இந்த சூழலில், கேரள வரலாற்றில் இரண்டாவது முறையாக, பினராயி விஜயன் தலைமையிலான புதிய அரசாங்கம் 20 ஆம் தேதி பதவியேற்றது. 15 வது சட்டமன்றத்தின் முதல் அமர்வு நேற்று தொடங்கியது.  140 எம்.எல்.ஏ.க்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரஹீம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆங்கில அகர வரிசைப்படி உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்எல்ஏ ராஜா தமிழில் பதவியேற்றார்.  அவர் கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் படித்து வழக...

அம்மா உணவகத்தை தாக்கியது மர்ம நபர்களா... செய்தி ஊடகங்கள் ஜால்றா ஊடகங்கள் ஆன கதை தெரியுமா உங்களுக்கு?

படம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் முதல்வராக பதவி கூட ஏற்காத நிலையில், திமுகவினர் அம்மா உணவகத்தை அடித்து உடைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், புதிய தலைமுறை மற்றும் ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம், "திமுகவிடம் சரணாகதி அடைந்து விட்டனவா தமிழக ஊடகங்கள்" என கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் தமிழக முதல்வராகக் கூட பொறுப்பேற்காத நிலையில், சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை திமுகவினர் சூரையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்திற்குள் சென்று, அங்கிருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை தூக்கி எரிந்து அட்டகாசம் செய்துள்ளனர். இது அங்கு உணவருந்த வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கி, பெயர் பலகையை கிழித்த இருவர் மீதும் தகுந்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும், இதில் ஈடுபட்ட இருவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் திமுக தலைவர...

அம்மா உணவகம் அடித்து நொறுக்கல்! இது தான் ஸ்டாலின் தரும் விடியலா? ஆட்சிக்கு வந்த உடனே அராஜகத்தில் இறங்கிய திமுகவினர்!

படம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் முதல்வராக பதவி கூட ஏற்காத நிலையில், திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 11.05 மணி வேலையை திமுகவினர் தொடங்கி விட்டதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களிடையே பேச்சாக உள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. 1996'க்குப் பிறகு தற்போது தான் தனிப்பெரும்பான்மையுடன் மக்களின் நம்பிக்கையை பெற்று திமுக ஆட்சியமைக்கும் இந்த சூழலில், தாங்கள் 2006-11 காலத்தைப் போன்ற ஆட்சி நிர்வாகத்தைத் தான் வழங்குவோம் என்பது போல் திமுகவினர் நடந்து கொள்வதாக பேசப்படுகிறது. முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின் போதே, திமுகவின் கொ.ப.செ ஆ.ராசா மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போன்றோர், போலீசார் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக நேரடியாகவே மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி வந்தனர். இதானால், திமுக ஆட்சிக்கு வந்தால் 2006-11 கால ஆட்சியைப் போல், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் மீண்டும் அராஜகம் தழைத்தோ...

நடிகர் விவேக்கின் இறப்பிலும் சாதியை முன்னிறுத்தி இரங்கல்... சாதிவெறியில் ஊறிப்போய் விட்டதா திராவிடர் கழகம்?

படம்
தந்தை பெரியார் தமிழகத்தில் சாதிகளை ஒழிக்க அரும்பாடுபட்டார், சாதிக்கொடுமைகளை களைந்தார், இது பெரியார் மண் என்றெல்லாம் திராவிடர் கழகமும் அவர்களுக்கு ஆதரவாக திராவிடர் முன்னேற்றக் கழகமும் தமிழகத்தில் மார்க்கெட்டிங் செய்வது நாம் அறிந்த ஒன்றே. சில திராவிட வெறியர்கள், பெரியார் மட்டும் இல்லையென்றால் தமிழன் ஆடு மாடு தான் மேய்த்துக் கொண்டிருந்திருப்பான் எனக் கூறி புளகாங்கிதப் படுவதும் உண்டு. இப்படி தாங்கள் தான் சமூக நீதி காத்தோம் எனக் கூறிக்கொண்டு உலாவரும் திராவிடர் கழகத்தின் தலைவர் "மானமிகு ஆசிரியர் கி.வீரமணி", திரைப்பிரபலம் மட்டுமல்லாது சமூகத்தின் நன்மைக்காக ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட ஒரு பரிசுத்த ஆன்மாவின் மரணத்தை குறிப்பிட்டு வெளியிட்ட இரங்கல் செய்தியில், அவரது சாதி பின்புலத்தை குறிப்பிட்டது, திராவிடர் கலகத்தினரின் மனதில் எப்போதும் சாதி குறித்த எண்ணம் மட்டும் தான் ஓடுகிறதா எனும் ஐயம் எழுகிறது. முன்னதாக, சின்னக் கலைவாணர் என அன்போடு போற்றப்படும் நடிகர் விவேக், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த...

இனி வக்கீல்கள் கருப்பு அங்கி பயன்படுத்தத் தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

படம்
  பார் கவுன்சில் விதிகளின் படி வக்கீல்களின் ஆடைக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பரபரப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது. வக்கீல்களின் அடையாளம் என்பதே அவர்கள் அணியும் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை தான். இதனால் வக்கீல்கள் பெரும்பாலும் கருப்பு அங்கியுடனே காட்சி தருகின்றனர். மேலும் அரசுக்கு எதிராகவோ, போலீசுக்கு எதிராகவோ போராட்டம் நடத்தினாலும் கூட கருப்பு அங்கியை விடுவதில்லை. இது பார் கவுன்சில் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து பார் கவுன்சில் தொடர்ந்த ஒரு வழக்கில், போராட்டங்களில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கருப்பு அங்கியையும் கழுத்துப்பட்டையையும் வக்கீல்கள் பயன்படுத்தக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.