சீமான் பேச்சு - அரசியல் அபிலாஷைக்கா? இனத்தின் எழுச்சிக்கா?
தான் பீலா விடுகிறேன் என்பதை வெளிப்படையாகவே சீமான் ஒப்புக் கொண்டாலும், அண்ணனின் விழுதுகள் என்று சிலர் அண்ணன் பேசுவதை உண்மையென்று நம்பி உணர்ச்சிப் பிழம்பாக திரிகின்றனர். அப்படிப்பட்ட தம்பிகள் சிலர் பகிர்ந்த காணொளி தான். இதில் அண்ணன் என்ன சொல்கிறார் என்றால் தேர்தலுக்காகத்தான் CRPF படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்கிறார். அதாவது தேர்தலுக்காக நடத்தப்பட்டது என்றால் அதை மோடி தான் நடத்தியுள்ளார் என்று கூட நிறைய தம்பிகள் உளறிக் கொண்டுள்ளார்கள். சரி அந்த தம்பிகள் அப்படித்தான். அவர்கள் அண்ணன் "இந்தியா என்பதே கற்பனை, தமிழ் தேசியமே நமக்கானது , இனத்தின் விடுதலை" என்று பேசினாலும் "ஜே!" சொல்வார்கள். இவர்கள் எதிர்க்கும் "இந்திய தேசியம் தேர்தல் நடத்தினால் அதில் பங்கெடுத்து ஆட்சியைப் பிடிப்போம்" என்றாலும் முன்பு இந்திய தேசியத்தை எதிர்த்து விட்டு பிறகு அதே தேசியம் நடத்தும் தேர்தலில் பங்கேற்பது அறிவிலித்தனமாக இல்லையா? என்று சிந்திக்காமல் "ஜே" சொல்லும் கூட்டம். சரி விசயத்திற்கு வருவோம். தேர்தலுக்காகத் தான் தாக்குதலை பாகிஸ்தானிலிருந்து வந்து திட்...