இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனி வாரா வாரம் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம்... எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?

படம்
ஜனவரி 2021 முதல் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை எனும் நிலையிலிருந்து மாற்றப்பட்டு வாரம் ஒரு முறை திருத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் சமையல் எரியாவு சிலிண்டரின் விலை அடுத்த ஆண்டிலிருந்து வாரா வாரம் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த விலைகள் மாதாந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.  ஆனால் இப்போது எண்ணெய் நிறுவனங்கள் வாராந்திர அடிப்படையில் விலைகளை மாற்ற திட்டமிட்டுள்ளன. பெட்ரோலிய பொருட்களின் விலையில் தினசரி ஏற்ற இறக்கங்களைக் கொண்டு, பெட்ரோலிய நிறுவனங்கள் இப்போது வாரத்திற்கு ஒரு முறை விலைகளை மாற்றுவதற்கான வழிகளை பரிசீலித்து வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் மாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றப்பட்டால், ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும்.  புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன. கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிற பொருட்களைச் சேர்த்த பிறகு பெட்ரோல் ...

இனி வக்கீல்கள் கருப்பு அங்கி பயன்படுத்தத் தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

படம்
  பார் கவுன்சில் விதிகளின் படி வக்கீல்களின் ஆடைக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பரபரப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது. வக்கீல்களின் அடையாளம் என்பதே அவர்கள் அணியும் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை தான். இதனால் வக்கீல்கள் பெரும்பாலும் கருப்பு அங்கியுடனே காட்சி தருகின்றனர். மேலும் அரசுக்கு எதிராகவோ, போலீசுக்கு எதிராகவோ போராட்டம் நடத்தினாலும் கூட கருப்பு அங்கியை விடுவதில்லை. இது பார் கவுன்சில் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து பார் கவுன்சில் தொடர்ந்த ஒரு வழக்கில், போராட்டங்களில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கருப்பு அங்கியையும் கழுத்துப்பட்டையையும் வக்கீல்கள் பயன்படுத்தக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.