இடுகைகள்

அம்மா உணவகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா உணவகத்தை தாக்கியது மர்ம நபர்களா... செய்தி ஊடகங்கள் ஜால்றா ஊடகங்கள் ஆன கதை தெரியுமா உங்களுக்கு?

படம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் முதல்வராக பதவி கூட ஏற்காத நிலையில், திமுகவினர் அம்மா உணவகத்தை அடித்து உடைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், புதிய தலைமுறை மற்றும் ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம், "திமுகவிடம் சரணாகதி அடைந்து விட்டனவா தமிழக ஊடகங்கள்" என கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் தமிழக முதல்வராகக் கூட பொறுப்பேற்காத நிலையில், சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை திமுகவினர் சூரையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்திற்குள் சென்று, அங்கிருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை தூக்கி எரிந்து அட்டகாசம் செய்துள்ளனர். இது அங்கு உணவருந்த வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கி, பெயர் பலகையை கிழித்த இருவர் மீதும் தகுந்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும், இதில் ஈடுபட்ட இருவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் திமுக தலைவர...

அம்மா உணவகம் அடித்து நொறுக்கல்! இது தான் ஸ்டாலின் தரும் விடியலா? ஆட்சிக்கு வந்த உடனே அராஜகத்தில் இறங்கிய திமுகவினர்!

படம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் முதல்வராக பதவி கூட ஏற்காத நிலையில், திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 11.05 மணி வேலையை திமுகவினர் தொடங்கி விட்டதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களிடையே பேச்சாக உள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. 1996'க்குப் பிறகு தற்போது தான் தனிப்பெரும்பான்மையுடன் மக்களின் நம்பிக்கையை பெற்று திமுக ஆட்சியமைக்கும் இந்த சூழலில், தாங்கள் 2006-11 காலத்தைப் போன்ற ஆட்சி நிர்வாகத்தைத் தான் வழங்குவோம் என்பது போல் திமுகவினர் நடந்து கொள்வதாக பேசப்படுகிறது. முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின் போதே, திமுகவின் கொ.ப.செ ஆ.ராசா மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போன்றோர், போலீசார் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக நேரடியாகவே மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி வந்தனர். இதானால், திமுக ஆட்சிக்கு வந்தால் 2006-11 கால ஆட்சியைப் போல், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் மீண்டும் அராஜகம் தழைத்தோ...