இடுகைகள்

Tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வட இந்தியாவில் சீறிப்பாயும் வீரமங்கை வேலுநாச்சியார் ரயில்... அசத்தும் இந்திய ரயில்வே... பின்னணி என்ன?

படம்
இந்திய ரயில்வே தமிழகத்தின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும், முதல் இந்திய பெண் சுதந்திரப் போராளி ராணி வேலுநாச்சியாரை சிறப்பிக்கும் வகையில், ரயில் என்ஜின் ஒன்றுக்கு அவரஅது பெயரை வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இது தொடர்பான பதிவுகள் வெளியான நிலையில், இது உண்மையான பொய்யா என சிலர் கேட்டதன் அடிப்படையில் இது குறித்த தேடலில், ராணி வேலுநாச்சியார் உட்பட, இந்திய விடுதலை வரலாற்றில் பெரிதாக கண்டுகொள்ளப்படாத சில வீர மங்கைகளின் பெயர் ரயில் என்ஜினுக்கு சூட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. யார் இந்த வேலு நாச்சியார்? தென்னாட்டின் ஜான்சி ராணி என நமது தமிழக வராலற்றில் சொல்லப்பட்டாலும், ஜான்சி ராணி லக்ஷ்மிபாயிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படையினரை ஓடஓட விரட்டியவர் ஆவார். 1730 ஆம் ஆண்டு ராமநாதபுரம் சமஸ்தானத்து செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும் சக்கந்தி முத்தாளுக்கும் மகளாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே மிகவும் வீரத்துடன் விளங்கிய வேலு நாச்சியார் அனைத்து போர்கலைகளிலும் தேர்ச்சி பெற்றதோடு, பிரெஞ்சு, ஆங்கிலம், உருது உள்ளிட்ட பன்மொழி திறமை கொண்ட...

சீமான் அண்ணாச்சியும் நாயக்கர்களும் - அண்ணனுக்கு என்ன தான் ஆச்சு!

படம்
சிவகங்கையிலிருந்து சினிமா ஆசையின் காரணமாக சென்னை வந்த சீமான் தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப காலங்களில் தன்னை ஒரு பெரியாரியவாதியாக காட்டிக் கொண்டார். பின்னர் தமிழர் தேசியம் என்றார், வீரத் தமிழராக நாயக்கர்களைக் கை காட்டி நம்மை அவர்கள் அடிமைப் படுத்தி ஆண்டார்கள், அவர்கள் வந்தேரிகள் என்று நமது உணர்ச்சியை தூண்டினார். பிறகு சில காலம் கழித்து நாம் தமிழரான பிறகு நாயக்க வாரிசுகளை "என் அப்பத்தா, என் அப்பச்சி" என வீர வசனம் பேசி உணர்ச்சியை தூண்டுகிறார். உண்மையில் இவரின் கொள்கை தான் என்ன? யாருக்கு தெரியும், நேத்து நாயக்கர்களை திட்டி, இன்று ஆராதிப்பதைப் போல நாளைக்கு வந்தேரிகளையும் ஆராதிக்கலாம். ஒரு கட்சியென்றால் அதன் தலைமைக்கு ஒரு கொள்கை இருக்கும். அதன் வழி நடப்பவர்கள் அந்த கட்சியில் இணைந்து செயல்படுவர். கட்சியை தொடங்கியவருக்கே என்ன கொள்கை, கோட்பாடு என்பது தெரியாத போது இவரை நம்பி பின்செல்லுபவர்கள் "ஏன்னே இப்படி?" என்று கேட்கிறார்களா என்று பார்த்தால் அவர்கள் எளிய தமிழ்ப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்த மாதிரியான எளிய தமிழ்ப் பிள்ளைகளை பார்க்கும் போது, இங்கு இணை...