இடுகைகள்

இஸ்லாம் தோன்றிய நாட்டில் இந்துமத புராணங்கள்... ராமாயணம், மஹாபாரதம் கற்கும் சவூதி மாணவர்கள்!

படம்
இஸ்லாமிய தேசமான சவூதி அரேபியா மாறிவரும் உலகளாவிய சூழலின் மத்தியில் தன்னை மறுவடிவக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.  சன்னி பிரிவு முஸ்லீம்களின் நாடான சவூதி அரேபியா கல்வித்துறைக்காக ஒரு புதிய “விஷன் -2030”ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாணவர்களுக்கு கலாச்சார படிப்புகளின் கீழ் மற்ற நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரம் கற்பிக்கப்படுகிறது.  இதில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.  சவூதி உலகளாவிய வளர்ச்சியின் போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள “விஷன் -2030” இன் படி, இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  சவூதியின் முதல் யோகா ஆசிரியரும், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ பட்டத்தையும் வென்றுள்ள நவுப்-அல்-மார்வாய், தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளதன் மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.  படத்தைப் பகிர்ந்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அவர், “சவூதி அரேபியாவின் புதிய விஷன்-2030 தாராளமயமான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள எதிர்காலத்தை உருவாக்க உதவும். சமூக ஆய்வுகள் புத்தகத்தில் இன்று எனது மகன...

நடிகர் விவேக்கின் இறப்பிலும் சாதியை முன்னிறுத்தி இரங்கல்... சாதிவெறியில் ஊறிப்போய் விட்டதா திராவிடர் கழகம்?

படம்
தந்தை பெரியார் தமிழகத்தில் சாதிகளை ஒழிக்க அரும்பாடுபட்டார், சாதிக்கொடுமைகளை களைந்தார், இது பெரியார் மண் என்றெல்லாம் திராவிடர் கழகமும் அவர்களுக்கு ஆதரவாக திராவிடர் முன்னேற்றக் கழகமும் தமிழகத்தில் மார்க்கெட்டிங் செய்வது நாம் அறிந்த ஒன்றே. சில திராவிட வெறியர்கள், பெரியார் மட்டும் இல்லையென்றால் தமிழன் ஆடு மாடு தான் மேய்த்துக் கொண்டிருந்திருப்பான் எனக் கூறி புளகாங்கிதப் படுவதும் உண்டு. இப்படி தாங்கள் தான் சமூக நீதி காத்தோம் எனக் கூறிக்கொண்டு உலாவரும் திராவிடர் கழகத்தின் தலைவர் "மானமிகு ஆசிரியர் கி.வீரமணி", திரைப்பிரபலம் மட்டுமல்லாது சமூகத்தின் நன்மைக்காக ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட ஒரு பரிசுத்த ஆன்மாவின் மரணத்தை குறிப்பிட்டு வெளியிட்ட இரங்கல் செய்தியில், அவரது சாதி பின்புலத்தை குறிப்பிட்டது, திராவிடர் கலகத்தினரின் மனதில் எப்போதும் சாதி குறித்த எண்ணம் மட்டும் தான் ஓடுகிறதா எனும் ஐயம் எழுகிறது. முன்னதாக, சின்னக் கலைவாணர் என அன்போடு போற்றப்படும் நடிகர் விவேக், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த...

இனி வாரா வாரம் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம்... எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?

படம்
ஜனவரி 2021 முதல் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை எனும் நிலையிலிருந்து மாற்றப்பட்டு வாரம் ஒரு முறை திருத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் சமையல் எரியாவு சிலிண்டரின் விலை அடுத்த ஆண்டிலிருந்து வாரா வாரம் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த விலைகள் மாதாந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.  ஆனால் இப்போது எண்ணெய் நிறுவனங்கள் வாராந்திர அடிப்படையில் விலைகளை மாற்ற திட்டமிட்டுள்ளன. பெட்ரோலிய பொருட்களின் விலையில் தினசரி ஏற்ற இறக்கங்களைக் கொண்டு, பெட்ரோலிய நிறுவனங்கள் இப்போது வாரத்திற்கு ஒரு முறை விலைகளை மாற்றுவதற்கான வழிகளை பரிசீலித்து வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் மாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றப்பட்டால், ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும்.  புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன. கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிற பொருட்களைச் சேர்த்த பிறகு பெட்ரோல் ...

இனி வக்கீல்கள் கருப்பு அங்கி பயன்படுத்தத் தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

படம்
  பார் கவுன்சில் விதிகளின் படி வக்கீல்களின் ஆடைக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பரபரப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது. வக்கீல்களின் அடையாளம் என்பதே அவர்கள் அணியும் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை தான். இதனால் வக்கீல்கள் பெரும்பாலும் கருப்பு அங்கியுடனே காட்சி தருகின்றனர். மேலும் அரசுக்கு எதிராகவோ, போலீசுக்கு எதிராகவோ போராட்டம் நடத்தினாலும் கூட கருப்பு அங்கியை விடுவதில்லை. இது பார் கவுன்சில் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து பார் கவுன்சில் தொடர்ந்த ஒரு வழக்கில், போராட்டங்களில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கருப்பு அங்கியையும் கழுத்துப்பட்டையையும் வக்கீல்கள் பயன்படுத்தக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

படம்
மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு மூன்று நாள் பயணமாக புறப்பட்டார். ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் மூலம் இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு மற்றும் மூலோபாய நட்பை மேலும் ஆழமாக்குவதற்கான வழிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் மாஸ்கோவில் நடைபெறும் 75 வது வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் தங்கியிருக்கும் சமயத்தில் ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் மற்றும் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுகு ஆகியோரை சந்திக்க உள்ளார், மேலும் ரஷ்ய தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை விரைவாக வழங்குவது தொடர்பாக அவர் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . 2021 டிசம்பருக்குள் இந்தியா எஸ் -400 ஏவுகணை பாதுகாப்பு முறையைப் பெறவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதன் விநியோகம் தாமதமாகிறது. இந்த விஜயத்தின் போது, ​​ரஷ்ய போர் விமானங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்களை அவசரமாக வழங்குவது குறித்து ...

2024’ல் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் : மோடி அரசுடன் மோதுகிறாரா பிரணாப் முகர்ஜி?

படம்
  முன்பொரு காலத்தில் காங்கிரஸ் இந்தியாவில் கோலோச்சிய போது, பல்வேறு கால கட்டங்களில் நிதி அமைச்சகத்திலும், பின்பு இந்திய ஜனாதிபதியாகவும் பணியாற்றிய திரு பிரணாப் முகர்ஜி முன்பு மோடி அரசை புகழ்ந்து வந்த நிலையில் தற்போது விமர்சனத்தை வைத்திருப்பது டெல்லி வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரம் கூடிய விரைவில் 5 ட்ரில்லியன் அளவிற்கு உயரும் என்று கூறியிருந்தது. இதையடுத்து தற்போது இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ‘இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியனாக டாலர் அளவிற்கு உயர தற்போதைய அரசு மட்டம் காரணமல்ல. முன்னதாக இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை ஆண்ட காங்கிரசும் அதன் ஆட்சியாளர்களும் போட்ட வலுவான அடித்தளமும் முக்கிய காரணம். இதை மறுத்து 55 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி செய்ததை விமர்சிப்பவர்கள் சுதந்திரத்தின் போது நாடு இருந்த நிலையையும் தற்போது நாடு இருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாட்டிற்காக தொண்டாற்றிய பலர் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தனர். ஆனால...

பயிற்று மொழியாக தாய்மொழியைத் திணிக்கும் மத்திய அரசு? : புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன

படம்
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து மாநிலங்களிலும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட நபர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தயாரிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையானது கடந்த மே 31'ம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவே இந்த புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் வேலையில் ஈடுபட்டது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மக்களின் கருத்தறிய வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில்  இதை இந்தித் திணிப்பு என்று சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தனர். திராவிட அரசியல்வாதிகள் இதைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் மக்களிடையே இந்தித் திணிப்பு என திரும்பத் திரும்ப பேசி உணர்ச்சியை தூண்டிக் கொண்டே இருந்ததால், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "மத்திய அரசிற்கு எந்த ஒரு மொழியையும் திணிக்கும் எண்ணம் இல்லை. அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அரசு செயல்படுகிறது" என அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து மும்மொழிக் கொள்கையை இந்தித் திணிப்பு என தவற...