2024’ல் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் : மோடி அரசுடன் மோதுகிறாரா பிரணாப் முகர்ஜி?

 
முன்பொரு காலத்தில் காங்கிரஸ் இந்தியாவில் கோலோச்சிய போது, பல்வேறு கால கட்டங்களில் நிதி அமைச்சகத்திலும், பின்பு இந்திய ஜனாதிபதியாகவும் பணியாற்றிய திரு பிரணாப் முகர்ஜி முன்பு மோடி அரசை புகழ்ந்து வந்த நிலையில் தற்போது விமர்சனத்தை வைத்திருப்பது டெல்லி வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரம் கூடிய விரைவில் 5 ட்ரில்லியன் அளவிற்கு உயரும் என்று கூறியிருந்தது.
இதையடுத்து தற்போது இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ‘இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியனாக டாலர் அளவிற்கு உயர தற்போதைய அரசு மட்டம் காரணமல்ல.
முன்னதாக இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை ஆண்ட காங்கிரசும் அதன் ஆட்சியாளர்களும் போட்ட வலுவான அடித்தளமும் முக்கிய காரணம்.
இதை மறுத்து 55 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி செய்ததை விமர்சிப்பவர்கள் சுதந்திரத்தின் போது நாடு இருந்த நிலையையும் தற்போது நாடு இருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
நாட்டிற்காக தொண்டாற்றிய பலர் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தனர்.
ஆனால் இன்று இருபபவர்களோ திட்டக் கமிஷனையே கலைத்தவர்கள்” என்று தெரிவித்தார்.
கடந்த 2014’ம் வருடம் நரேந்திர மோடி ஆட்சி அமைத்தவுடன் திட்டக் கமிஷனைக் கலைத்து விட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் எனும் அமைப்பை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!