இஸ்லாம் தோன்றிய நாட்டில் இந்துமத புராணங்கள்... ராமாயணம், மஹாபாரதம் கற்கும் சவூதி மாணவர்கள்!
இஸ்லாமிய தேசமான சவூதி அரேபியா மாறிவரும் உலகளாவிய சூழலின் மத்தியில் தன்னை மறுவடிவக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
சன்னி பிரிவு முஸ்லீம்களின் நாடான சவூதி அரேபியா கல்வித்துறைக்காக ஒரு புதிய “விஷன் -2030”ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாணவர்களுக்கு கலாச்சார படிப்புகளின் கீழ் மற்ற நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரம் கற்பிக்கப்படுகிறது.
இதில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
சவூதி உலகளாவிய வளர்ச்சியின் போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள “விஷன் -2030” இன் படி, இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சவூதியின் முதல் யோகா ஆசிரியரும், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ பட்டத்தையும் வென்றுள்ள நவுப்-அல்-மார்வாய், தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளதன் மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.
படத்தைப் பகிர்ந்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அவர், “சவூதி அரேபியாவின் புதிய விஷன்-2030 தாராளமயமான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள எதிர்காலத்தை உருவாக்க உதவும். சமூக ஆய்வுகள் புத்தகத்தில் இன்று எனது மகனின் பள்ளித் தேர்வின் ஸ்கிரீன் ஷாட்டில் இந்து மதம், பௌத்தம், ராமாயணம், கர்மா, மகாபாரதம் மற்றும் தர்மம் ஆகியவற்றின் கருத்துகள் மற்றும் வரலாறு ஆகியவை குறித்த கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அவளுடைய படிப்புக்கு உதவுவதில் நான் மகிழ்ந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சவூதியின் கல்வி பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பல புதுமைகள், படித்த மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதன் மூலம் சவூதி அரேபியா உலகப் பொருளாதாரத்தின் போட்டியில் சேரும் என்று கூறுகிறது.
1932 இல் தற்போதைய சவூதி அரேபியா உருவான பின்னர் நடக்கும் மிகப்பெரிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.
குறிப்பாக நாட்டின் செயல் தலைவரும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் நாட்டை நவீனமயப் படுத்த பல புதுமைகளை அங்கு தொடர்ந்து அமல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள்
கருத்துரையிடுக
Add your valuable comment