இடுகைகள்

தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறதா கூகுள் நிறுவனம்? - அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்

படம்
உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் 2016ல் வெளியிட்ட ஆண்ட்ராய்டு செயலியான கூகுள் டுயோ மூலம் தனது தமிழின விரோதப் போக்கை வெளிப்படுத்தியிள்ளதா? அப்படி என்ன செய்தது....... சரி விசயத்துக்கு வருவோம்! கூகுள் டுயோ என்பது HD Video Calls'களை மேற்கொள்ள உதவும் ஒரு செயலி. இது Android மற்றும் iOS'களில் கிடைக்கிறது. இது கடந்த 2016 மே 18ம் தேதி கூகுள் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டு 16, 2016'ல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கூகுள் டுயோ தனது பிலிப்பைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு Data Rewards சலுகையை அறிவித்தது. இதற்கடுத்ததாக நவம்பரில் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக Cash Rewards சலுகையை வழங்க ஆரம்பித்துள்ளது. Cash Rewards Program'ல் இணைய இங்கே சொடுக்கவும் இந்த Cash Rewards எப்படி செயல்படுகிறது? கூகுள் டுயோ செயலியில் தனது முதல் Video Call'ஐ மேற்கொள்ளும் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த Cash Rewards கிடைக்கும். இந்த Cash Rewards எப்படி கிடைக்கும்? இந்த Cash Rewards'ஐ பெற நீங்கள் Google Pay(Formerly Tez)'யில் கணக்கு...

பிரிட்டன் எம்.பி'யே இந்திய பிரதமரை அசிங்கப்படுத்திவிட்டார் - மோடிக்கு இப்பவாவது உரைக்குமா?

படம்
சமீபத்தில் ஒரு மீம் வைரலாகி வருகிறது. அதில் பிரிட்டன் எம்.பி பீட்டர் போன்,  இந்திய மோடி அரசு 3000 கோடியில் பட்டேல் சிலையை கட்டியதை முட்டாள் தனமான செயல் என்று விமர்சித்துள்ளதாக அந்த மீம் கூறுகிறது. இது தான் அந்த மீம்.... இப்படிப்பட்ட மீம்களையெல்லாம் பார்த்து உடனே உணர்ச்சிவசப்பட்டு அடடே, அருமை என்று பகிரக் கூடாது. மாறாக இது உண்மையா என்று ஆராய வேண்டும். ஆனா ஊனா இது பெரியார் மண்ணு டோய் என்று வாய் கிழிய கூவுகிறீர்களே, அந்த பெரியார் "நானே சொன்னாலும் நம்பக் கூடாது, உண்மையை ஆராய்ந்து பிறகு நம்புங்கள்' அப்படினு தான் சொல்லியிருக்கார்'ல. அத கொஞ்சம் மண்டையில ஏத்துங்க மக்களே.... சரி, நாம விசயத்துக்கு வருவோம். உண்மையிலேயே இந்த பீட்டர் போன் என்ற பிரிட்டன் எம்.பி இந்திய பிரதமர் மோடி பட்டேல் சிலை அமைத்ததை முட்டாள் தனமான செயல் என்றாரா? இல்லவே இல்லை. அவர் சொன்னதன் சாராம்சம் வேறு. நம்மாளுங்க சினிமா மாயையில் இருப்பதால் கொஞ்சம் மசாலா தடவி, இது தான் உண்மை என்பதைப் போல் மீம் பரப்பி வருகிறார்கள். ஏன் அதன் சாராம்சம் வேறு என்பதற்குள் போகும் முன் பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட வெ...

நரேந்திர மோடியால் இந்தியப் பொருளாதாரம் 1970களுக்கு பின்னோக்கி சென்று விட்டதா?

படம்
ஜானி ஜானி எஸ் பாப்பா முகநூலில் வருவதை அப்படியே நம்பக் கூடாது பாப்பா.... விசயம் என்னன்னா நம்ம அமெரிக்க வாஷிங்டன் போஸ்ட் ஒரு போஸ்ட் போட்டிருக்கு - அதில் இந்திய பிரதமரின் நடவடிக்கைகளால் பொருளாதார ரீதியாக இந்தியா பின்னோக்கி 1970'களுக்கு சென்று விட்டதாக எழுதியிருக்காம். இத வச்சு நம்மாளுங்க நம்ம இந்திய பிரதமர விமர்சிக்கிறார்களாம்.... விமர்சனம் பண்ணுங்க தப்பில்ல, ஆனால் பாதிய மென்னு முழுங்கி சொல்லாதீங்க.... முழுசா சொல்லுங்க.... இந்த கட்டுரை தற்போது வந்தத போல வெளியிட்டுருக்காங்க நம்ம ஆளுங்க... ஆனா உண்மை என்னன்னா இந்த கட்டுரை ஜனவரி 23, 2017ல் வெளிவந்திருக்கு, கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகப் போகிறது. இப்ப பரப்புவதன் நோக்கம் என்னனு பதிவ போட்டவருக்கே வெளிச்சம். அடுத்து இந்த கட்டுரை வந்திருப்பது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் குளோபல் ஒப்பீனியன் பகுதியில் வெளிவந்துள்ளது. குளோபல் ஒப்பீனியன் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பரிச்சயமான பத்திரிகையாளர்கள் தங்களது கட்டுரையை வெளியிடுவார்கள். முன்பொருமுறை நமது இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து போனபோது அங்குள்ள பத்திரிகையில் இந்திய-இங்கிலாந...

பசும்பொன் தேவர் அய்யாவைக் கொலை செய்ய முயர்ச்சித்தார்களா?

படம்
பசும்பொன் தேவரை கொலை செய்ய முயற்சித்த இஸ்லாமியர்கள்... பசும்பொன் கிராமத்துக்கு அருகே இருக்கும் ஊர் அபிராமம். அங்கே இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்குப் போய் தொழிலோ, வியாபாரமோ செய்து திரும்பி வந்தவர்கள் பெரும் பணக்காரர்களாக வாழ்பவர்கள். அந்த கிராமத்தில் ஒரு சந்தை இருந்தது. வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடும். அது முஸ்லீம்கள் அதிகம் வசிக்கிற பகுதி. சந்தைக்கு வியாபாரம் செய்ய வருகிற இளம் பெண்களை சில முஸ்லீம் இளைஞர்கள் கேலி செய்து வம்புக்கிழுப்பது நடந்து வந்தது. ஒரு நாள் மோர் விற்ற ஒரு பெண்ணிடமும், காய்கறி விற்கப் போன பெண்ணிடமும் அவர்கள் மோசமாக நடந்து கொண்டார்கள். அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு அங்கே யாருக்கும் தைரியமும் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் பசும்பொன்னுக்கு வந்தார்கள். தேவரிடம் முறையிட்டார்கள். "நான் பார்த்துக்கொகிறேன். போய் வாருங்கள்" என்று அந்தப் பெண்களை அனுப்பி வைத்தார் தேவர். எம்மதத்தினராயினும் சரி தாய்க்குலமாகிய பெண் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதியைத் தாங்கமுடியாத உள்ளம் கொண்ட தே...

சீமான் அண்ணாச்சியும் நாயக்கர்களும் - அண்ணனுக்கு என்ன தான் ஆச்சு!

படம்
சிவகங்கையிலிருந்து சினிமா ஆசையின் காரணமாக சென்னை வந்த சீமான் தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப காலங்களில் தன்னை ஒரு பெரியாரியவாதியாக காட்டிக் கொண்டார். பின்னர் தமிழர் தேசியம் என்றார், வீரத் தமிழராக நாயக்கர்களைக் கை காட்டி நம்மை அவர்கள் அடிமைப் படுத்தி ஆண்டார்கள், அவர்கள் வந்தேரிகள் என்று நமது உணர்ச்சியை தூண்டினார். பிறகு சில காலம் கழித்து நாம் தமிழரான பிறகு நாயக்க வாரிசுகளை "என் அப்பத்தா, என் அப்பச்சி" என வீர வசனம் பேசி உணர்ச்சியை தூண்டுகிறார். உண்மையில் இவரின் கொள்கை தான் என்ன? யாருக்கு தெரியும், நேத்து நாயக்கர்களை திட்டி, இன்று ஆராதிப்பதைப் போல நாளைக்கு வந்தேரிகளையும் ஆராதிக்கலாம். ஒரு கட்சியென்றால் அதன் தலைமைக்கு ஒரு கொள்கை இருக்கும். அதன் வழி நடப்பவர்கள் அந்த கட்சியில் இணைந்து செயல்படுவர். கட்சியை தொடங்கியவருக்கே என்ன கொள்கை, கோட்பாடு என்பது தெரியாத போது இவரை நம்பி பின்செல்லுபவர்கள் "ஏன்னே இப்படி?" என்று கேட்கிறார்களா என்று பார்த்தால் அவர்கள் எளிய தமிழ்ப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்த மாதிரியான எளிய தமிழ்ப் பிள்ளைகளை பார்க்கும் போது, இங்கு இணை...

நரகாசுரரும் தீபாவளியும் - என்ன தான் பிரச்சினை இந்த தமிழ் மண்ணில் (பாகம் 1)

படம்
Guwahati view from Narakasura Hill ஒவ்வொரு ஆண்டு தீபாவளி வரும் போதும் நரகாசுரரை முன் வைத்து தமிழ்நாட்டில் ஒரு இனப் பிரச்சினையே சில தமிழ் தேசிய இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது. உண்மையில் நரகாசுரர் ஒரு தமிழரா? தமிழ்ப் பிரதேசத்தை ஆண்ட மன்னரா? எதற்காக நரகாசுரரை முன் வைத்து தமிழ்நாட்டில் பிரச்சினைகள் இந்த இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது? இவற்றையெல்லாம் உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். இந்த பதிவில் நரகாசுரரை பற்றி புராணங்கள், நாட்டுப்புற கதைகள், வரலாற்று எச்சங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தகவல்களை பகிர்கிறேன். நரகாசுரரை பார்க்கும் முன் அவர் ஆட்சி செய்த பிரஜ்யோதிஸ்பூருக்கு ஒரு எட்டு போய்ட்டு வருவோம்! பிரஜ்யோதிஸ்பூர் எங்க இருக்கு? இன்றைக்கு கவுகாத்தி என்றும், குவ்காத்தி என்றும் நம்மால் அறியப்படும் அசாமின் தலைநகரம் தான் பண்டைய பிரஜ்யோதீஸ்பூர். பிரஜ்யோதீஸ்பூரை யார் ஆண்டார்கள்? இலக்கியத் தகவல்களின் மூலம் பண்டைய அசாம் பகுதியை உள்ளடக்கிய பிரஜ்யோதீஸ்பூரை ஆண்ட முதல் வம்சம் தனவா வம்சம் என்பதும், முதல் அரசர் மகிரங்க தனவா என்பதும் அறியப்படுகிறது. இவர்கள் இமயமலையில் இன்ற...